Tamilnadu
குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுத்த மூதாட்டி: அடுத்த நிமிடமே கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர்!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்களன்று குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த வகையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மூதாட்டி ஜெயலட்சுமி ஆட்சியர் மோகனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "மாற்றத்திறனாளி உதவித் தொகை மற்றும் மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும்" வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதைப் படித்து பார்த்த ஆட்சியர் மோகன் உடனே மூதாட்டியின் கோரிக்கையை நிறைவேற்றும்படி புதிய மூன்று சக்கர வாகனத்தை வழங்கும்படி உத்தரவிட்டார். ஆட்சியரின் இந்த உத்தரவை அடுத்து அதிகாரிகள் மூதாட்டிக்கு மூன்று சக்கர வாகனத்தை வழங்கினர்.
இதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்த மூதாட்டி ஜெயலட்சுமி ஆட்சியர் மோகனுக்கு நன்றி தெரிவித்தார். பிறகு ஆட்சியர் மூதாட்டியை மூன்று சக்கர சைக்கிளில் அமரவைத்து மூதாட்டியை ஓட்டிப்பார்க்கச் சொன்னார். ஆட்சியரின் இந்த நடவடிக்கை பார்த்த அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த அடுத்த நிமிடமே கோரிக்கை நிறைவேறியதைப் பார்த்து மாற்றுத்திறனாளி மூதாட்டி மகிழ்ச்சியுடன் தனது சொந்தமான மூன்று சக்கரவாகனத்தில் அங்கிருந்து தனது கிராமத்திற்குச் சென்றார். தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை கொடுக்கும் மனுக்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருவதற்கு இந்த சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
Also Read
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!