Tamilnadu
செல்ஃபி மோகத்தால் வந்த வினை.. நண்பர்கள் கண்முன்னே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர்!
திருவள்ளூர் மாவட்டம், ஆரிக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து திருக்கண்டலம் தடுப்பணை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது நவீன்குமார் தனது செல்போனில் அங்கிருந்த அழகிய காட்சிகளைப் படம் எடுத்துள்ளார். மேலும் செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது திடீரென நவீன்குமார் தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளார்.
இதைப்பார்த்து அவரது நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர். மேலும் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் ஆற்றில் விழுந்த நவீன்குமார் அடித்துச் செல்லப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்து போலிஸார், தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் அங்கு வந்தனர்.
பின்னர் 10 பேர் கொண்ட மீட்புக்குழு ஆற்றில் இறங்கி டிரோன் கேமரா உதவியுடன் நவீன்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நவீன்குமார் நண்பர்கள் கண்முன்னே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?