Tamilnadu
மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல்.. பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கத்தின் AUDIO வெளியாகி அதிர்ச்சி!
என்னதான் மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், பல்வேறு மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை வாங்கி பாஜக ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாட்டில் அக்கட்சியால் தலைநிமிர முடியாத நிலையே இருக்கிறது. இதன் காரணாமாக திரை பிரபலங்களை வைத்து தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்த பாஜக கடந்த சில ஆண்டுகளாகவே நடவடிக்கை எடுத்துவருகிறது.
ஆனாலும், பாஜகவால் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாத நிலையே இருந்து வருகிறது. இந்த நிலையில், அந்த கட்சிக்கு நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு கவுன்சிலரின் கணவரை பாஜக மாநில துணை தலைவராக இருக்கும் கே.பி.ராமலிங்கம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1997-ம் ஆண்டு முதல் பாஜகவில் உறுப்பினராக இருப்பவர் ஹரிஹரன். இவர் மாவட்ட செயலாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ள ஆடியோவில் பாஜக மாநில துணை தலைவராக இருக்கும் கே.பி.ராமலிங்கம் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தொலைபேசியில் கே.பி.ராமலிங்கம் தனக்கு கொலை மிரட்டல் விடும் ஆடியோவையும் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ளார். அதில் ராசிபுரம் நகருக்கும் நுழைந்தால் கொலை செய்து விடுவேன் என மோசமான முறையில் கே.பி.ராமலிங்கம் பேசியுள்ளது தெளிவாக பதிவாகியுள்ளது.
பொதுவாக ஒரு கட்சியில் மாவட்ட செயலாளர்கள் பெரிதும் மதிக்கப்படுவார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சியான பாஜகவில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளருக்கு பாஜக மாநில துணை தலைவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம்” : 5 முக்கிய அம்சங்கள் என்ன?
-
ஒன்றிய - மாநில உறவு : தமிழ்நாட்டின் குரலுக்கு ஆதரவு தந்த CM சித்தராமையா - நன்றி சொன்ன CM MK Stalin!
-
தென் இந்தியாவிலேயே முதன் முறை... சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்!
-
இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
இந்திய அளவிலான சிறப்பு கட்டமைப்புகளை பெற்று வரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை: அமைச்சர் மா.சு. பெருமிதம்!