Tamilnadu
மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல்.. பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கத்தின் AUDIO வெளியாகி அதிர்ச்சி!
என்னதான் மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், பல்வேறு மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை வாங்கி பாஜக ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாட்டில் அக்கட்சியால் தலைநிமிர முடியாத நிலையே இருக்கிறது. இதன் காரணாமாக திரை பிரபலங்களை வைத்து தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்த பாஜக கடந்த சில ஆண்டுகளாகவே நடவடிக்கை எடுத்துவருகிறது.
ஆனாலும், பாஜகவால் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாத நிலையே இருந்து வருகிறது. இந்த நிலையில், அந்த கட்சிக்கு நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு கவுன்சிலரின் கணவரை பாஜக மாநில துணை தலைவராக இருக்கும் கே.பி.ராமலிங்கம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1997-ம் ஆண்டு முதல் பாஜகவில் உறுப்பினராக இருப்பவர் ஹரிஹரன். இவர் மாவட்ட செயலாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ள ஆடியோவில் பாஜக மாநில துணை தலைவராக இருக்கும் கே.பி.ராமலிங்கம் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தொலைபேசியில் கே.பி.ராமலிங்கம் தனக்கு கொலை மிரட்டல் விடும் ஆடியோவையும் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ளார். அதில் ராசிபுரம் நகருக்கும் நுழைந்தால் கொலை செய்து விடுவேன் என மோசமான முறையில் கே.பி.ராமலிங்கம் பேசியுள்ளது தெளிவாக பதிவாகியுள்ளது.
பொதுவாக ஒரு கட்சியில் மாவட்ட செயலாளர்கள் பெரிதும் மதிக்கப்படுவார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சியான பாஜகவில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளருக்கு பாஜக மாநில துணை தலைவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அதிகரிக்கும் இஸ்லாமிய வெறுப்பு : பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
“பாஜக அரசின் பாரபட்சத்துக்கு இடையே மகத்தான சாதனை படைக்கும் திமுக ஆட்சி” - செல்வப்பெருந்தகை புகழாரம் !
-
வாக்குப்பதிவு இயந்திரங்களை கையில் எடுத்துச் சென்ற அதிகாரிகள் - பாஜக ஆளும் உ.பி-யில் ஷாக் !
-
ஹரியானாவில் கவிழும் பா.ஜ.க அரசு : அங்கு நடப்பது என்ன?
-
நயினார் உறவினரிடமிருந்து ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு : அடுத்தடுத்து சிக்கும் பாஜக நிர்வாகிகள் !