Tamilnadu
“என் பெயரை எல்லாரும் பேசணும்” : தனது வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது !
கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவ தொடர்பாக துறையினரின் தீவிர விசாரணையில், தனது வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய சக்கரபாணியை காவல்துறையினர் கைது செய்தனர்.
தனது பெயர் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டு வீசியதாக காவல் துறையினரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சக்கரபாணி இந்து முன்னணி அமைப்பின் நகர தலைவராக உள்ளார். இன்று காலை இவரது வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக எழுந்த புகாரினால் பரபரப்பு அதிகமானது.
இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல்துறையினரின் மோப்பநாய் டபி வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
இந்நிலையில்சக்கரபாணி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழவே, இன்று மாலை சக்கரபாணியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காவல்துறையினர் சக்கரபாணியிடம் விசாரணை நடத்தினர்.
இதில் தனது பெயர் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக தானே தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சக்கரபாணியை கைது செய்துள்ளனர். தனது பெயர் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக தனது வீட்டிற்கு தானே பெட்ரோல் குண்டு வீசி கைது செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Also Read
-
மீண்டும் மீண்டும் மக்களை அவதிக்குள்ளாக்கும் த.வெ.க : வரவேற்பு கொண்டாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்!
-
“இன்று மகளிரின் நம்பிக்கையாக திகழும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” : முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
ரூ.1000 வரவு வைத்தது தவெக அரசு : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே நிலைத்து நிற்கும்!
-
“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல”: மீண்டும் பிற்போக்குவாதிகளை கதறவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
-
அ.தி.மு.க ஆதரவு : “ஊழல் சக்திகள் தயவில் விஜய் ஆட்சி!...” -வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!