Tamilnadu
முதல்வர் மற்றும் பட்டியலினத்தவர் குறித்து ஆபாச பேச்சு.. வன்கொடுமை சட்டத்தின் கீழ் பா.ஜ.க பிரமுகர் கைது !
திருவள்ளுர் அருகே திருநின்றவூர், அடுத்த கொசவம்பாளையம், கொட்டம்மேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி(32). தொழில் நிறுவனங்களுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வருகிறார். இவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை குறித்து சமூக வலைத்தளத்தில் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகள் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
மேலும் தனது சமூகத்தை சேர்ந்த உறவினர் பெண் பட்டியலினதவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார் என கூறி பட்டியலினதவர்களை கொச்சையாக பேசி, அதனை சில தினங்களுக்கு முன்னர் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில், இந்த காட்சிகள் வேகமாக பரவியதை தொடர்ந்து பலரும் இணையத்தில் தமிழக காவல்துறையை தொடர்புக் கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி கோரி இருந்தனர்.
இந்தநிலையில் இந்த வீடியோ பதிவு பற்றி திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த் முதல்வர் குறித்து அவதூறு பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், IT ACT உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பூபதி வெங்கடேசனை திருநின்றவூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் ஆவடி அருகே கைது செய்த காவல் துறையினர் பூபதியிடம் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். முதல்வர் மற்றும் பட்டியலினதவர்கள் குறித்தும் அவதூறாக பேசி வீடியோ பதிவிட்ட பா.ஜ.க கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!