Tamilnadu
பறந்துசென்ற கோழி.. பிடிக்கமுயன்று பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி.. மூடநம்பிக்கையால் நேர்ந்த சோகம் !
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டியுள்ளது. அதற்கான திறப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய கட்டிடத்திற்கு கண் திருஷ்டி கழிக்க வேண்டும் என உரிமையாளர் முடிவெடுத்துள்ளார்.
அதற்காக அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது-70) என்ற முதியவரிடம் திருஷ்டி கழிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜேந்திரன் திருஷ்டி கழிப்பதற்காக ஊதுபத்தி, சூடம், பூசணிக்காய், உயிருள்ள கோழி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு அந்த புதிய கட்டிடத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமான அவர் வைத்திருந்த கோழி பறந்துசென்றுள்ளது. அதைத் தொடர்ந்து அதனை பிடிக்க கோழியின் பின்னால் ராஜேந்திரன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தில் லிப்ட் அமைப்பதற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் ராஜேந்திரன் தவறி விழுந்துள்ளார்.
இதில் தலையில் அடிபட்ட அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைக் கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து சங்கர்நகர் போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சடலத்தை பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Also Read
-
“NDA-வுக்கு தோல்வி எனும் தக்க பதிலடியை தமிழ்நாடு நிச்சயம் வழங்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“திராவிட மாடல் 2.0-விற்கு மகுடம் சூட்ட போகும் பெண்கள்” : அமைச்சர் கே.என்.நேரு உறுதி!
-
தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் பட்டியல் போட முடியுமா? : பிரதமர் மோடிக்கு முரசொலி கேள்வி!
-
2016–2022ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு: யாராருக்கு என்னென்ன விருதுகள்: முழு விவரம் இதோ!
-
அறிவுசார் நகரத்தை நோக்கி தமிழ்நாடு - முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!