Tamilnadu
கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை.. 300 கிலோ குட்கா கடத்தல்: அதிரடியாக பறிமுதல் செய்த போலிஸ்!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம் பேட்டை அருகே பல்லடம் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி போலிஸார் சோதனை செய்தனர்.
அப்போது, கண்டெய்னரின் உள்ளே காலியாக இருந்தது. இது குறித்து போலிஸார் ஓட்டுனரிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் எழுந்தது. பின்னர் வாகனத்தில் ஏறி போலிஸார் சோதனை செய்தனர்.
அதில், வாகனத்தின் உட்புறம் 3-க்கு 8 அடி என்ற அளவில் ரகசிய அறை இருந்ததை போலிஸார் கண்டுபிடித்தனர். அந்த அறையைத் திறந்து பார்த்த பொழுது உள்ளே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்ததை கண்டுபோலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், கண்டெய்னர் லாரி திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையை சேர்ந்த டைட்டஸ் என்பவருக்கு சொந்தமானதும், ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கியதும், இன்னும் பதிவு எண் வழங்கப்படவில்லை என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து 23 லட்சம் மதிப்பிலான 300 கிலோ குட்கா மற்றும் கண்டெய்னர் லாரியை போலிஸார் பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!
-
”அடுத்தடுத்த அரிவாள் வெட்டு.. அச்சத்தில் மக்கள்.. தறிகெட்டுப் போன சட்டம் ஒழுங்கு” : முழு விவரம்!
-
நடிகர் அஜித்குமார் தாயார் காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி