Tamilnadu
வேலைதேடி வரும் பெண்களே குறி.. வீட்டில் தங்கவைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த தம்பதி: விசாரணையில் பகீர்!
சென்னை அடுத்த திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அப்பர் நகர். இப்பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சரளா. இந்த தம்பதிகள் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலிஸார் தனிப்படை அமைத்து விசாணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் போலிஸார் தம்பதி வீட்டில் சோதனை மேற்கொண்டதில் இரண்டு பெண்களை வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.
இந்த தம்பதி, வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலை தேடிவரும் பெண்களைக் குறிவைத்து தனியார் நிறுவனங்களில் வேலை வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறி, பின்னர் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
இந்த தம்பதியிடம் இருந்த இரண்டு பெண்களை போலிஸார் மீட்டு அரசு காப்பக்காத்தில் தங்கவைத்துள்ளனர். அவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் தம்பதிகளை கைது செய்து இவர்களிடம் இருந்த மூன்று செல்போன்களையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலை தேடிவரும் வெளியூர் பெண்களை குறிவைத்து தம்பதியினர், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களின் நிதியை முடக்கும் ஒன்றிய பாஜக அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா?” : அதிமுக ஆட்சியின் அவலங்களை பட்டியலிட்டு வெளுத்து வாங்கிய முதலமைச்சர்!
-
கொரோனாவிலும் ஊழல் செய்த பழனிசாமி, இப்போது கப்சாக்களை அடித்து விடுகிறார்... - முரசொலி விமர்சனம்!
-
”வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்... வடக்கு முதல் மேற்கு வரை முந்தி நிற்கும் திமுக” : முழு விவரம் அறிய!
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை சூப்பர் ஃபாஸ்டாகத் தொடரபோகும் திமுக 2.0 : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!