Tamilnadu
காரக்குழும்பில் இருந்த காது குடையும் பட்ஸ்.. பிரபல ஹோட்டலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சென்னை அடுத்த பல்லாவரம் அருகே பிரபலமான தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சாப்பிட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், இந்த உணவகத்தில் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மதிய உணவு சாப்பிட வந்துள்ளார். இவர் முதலில் சாம்பார் ஊற்றிச் சாப்பிட்டுவிட்டு அடுத்ததாக காரக்குழுப்பு கேட்டுள்ளார்.
இதையடுத்து உணவு ஊழியர் காரக்குழும்பை எடுத்து சாதத்தில் ஏற்றியுள்ளார். அப்போது அதில் காது குடையும் பட்ஸ் இருந்தை கண்டு முருகன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து முருகன் உணவக உரிமையாளரிடம் கேட்டபோது முறையாகப் பதில் சொல்லாமல், அதை எடுத்துப் போட்டுவிட்டுச் சாப்பிடும் படி அலட்சியமாகக் கூறியுள்ளார். இதனால் உணவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட உணவுத்துறை அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Also Read
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!