Tamilnadu
காரக்குழும்பில் இருந்த காது குடையும் பட்ஸ்.. பிரபல ஹோட்டலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சென்னை அடுத்த பல்லாவரம் அருகே பிரபலமான தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சாப்பிட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், இந்த உணவகத்தில் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மதிய உணவு சாப்பிட வந்துள்ளார். இவர் முதலில் சாம்பார் ஊற்றிச் சாப்பிட்டுவிட்டு அடுத்ததாக காரக்குழுப்பு கேட்டுள்ளார்.
இதையடுத்து உணவு ஊழியர் காரக்குழும்பை எடுத்து சாதத்தில் ஏற்றியுள்ளார். அப்போது அதில் காது குடையும் பட்ஸ் இருந்தை கண்டு முருகன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து முருகன் உணவக உரிமையாளரிடம் கேட்டபோது முறையாகப் பதில் சொல்லாமல், அதை எடுத்துப் போட்டுவிட்டுச் சாப்பிடும் படி அலட்சியமாகக் கூறியுள்ளார். இதனால் உணவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட உணவுத்துறை அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!