Tamilnadu
"அதிமுக கூட்டத்துக்கு இலவசமாக பிரியாணி தரவேண்டும்" -பிரியாணி கடை உரிமையாளரை மிரட்டிய அதிமுக பிரமுகர் !
சென்னை திருவல்லிக்கேணி பகுதி அதிமுக செயலாளராக இருப்பவர் சீனிவாசன். இவர் கடந்த வாரம் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவதற்காக அப்பகுதியில் உள்ள பல்வேறு கடைகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்களிடம் கேட்டு மாமுல் மிரட்டிள்ளார்.
இதேபோல் சென்னை ராயப்பேட்டை ஜானி ஜான் சாலையில் உள்ள பிரபல பிரியாணி கடை எஸ்.எஸ் பிரியாணி கடையில் பொதுக் கூட்டத்திற்காக நிதி உதவி கேட்டுள்ளார்.அப்போது ஆயிரமோ இரண்டாயிரமோ கொடுப்பதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பொதுக்கூட்டத்திற்கு தேவையான அத்தனை செலவையும் உங்கள் நிறுவனம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரியாணி கடையின் உரிமையாளரை அதிமுக பிரமுகர் சீனிவாசன் மிரட்டியுள்ளார்.
இதை ஏற்க மறுத்த பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் கிளை மேலாளரிடம் தொலைபேசியில் மிரட்டும் தொனியில் திருவல்லிக்கேணி அதிமுக பகுதி செயலாளர் சீனிவாசன் பேசி உள்ளார். இதனை தொடர்ந்து ராயப்பேட்டை எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடை சார்பில் சென்னை ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் திருவல்லிக்கேணி அதிமுக பகுதி செயலாளர் சீனிவாசன் மீது புகார் மனோ அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக பகுதி செயலாளர் சீனிவாசன் பிரியாணி கடை உரிமையாளரை மிரட்டும் தொலைபேசி ஆடியோ தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”வாக்கு எண்ணும் மையங்களில் பாஜக சதித்திட்டம்.. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சொன்ன பகீர் தகவல்!”
-
NEET தேர்வு 2026 : தயார் நிலையில் 5,500 மையங்களில் 22.80 லட்சம் மாணவர்கள்!
-
”தோனி ஏன் மைதானத்திற்கு வருவதில்லை.. பயிற்சியாளர் மைக்கல் ஹசி சொன்ன காரணம்” : முழு விவரம் அறிக!
-
குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பயணிகள் பயணம் : ஒரே நாளில் இவ்வளவு பேரா?- மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!