Tamilnadu
சாலையில் சென்றபோது திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்.. நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்: நடந்தது என்ன?
காரைக்குடியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது சென்னை அடுத்துள்ள நொளம்பூரில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வண்டலூர் செல்வதற்காக இன்று காரில் சதீஷ், பிரதீப் ஆகிய சென்றுள்ளனர். இதையடுத்து திருநீர்மலை அருகே சென்றபோது திடீரென காரின் முன் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. இதைப்பார்த்த சதீஷ் உடனே காரை நிறுத்தியுள்ளார்.
பின்னர் இருவரையும் காரை விட்டு இறங்கியுள்ளனர். உடனே சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீ பிடித்து எரிந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கார் முழுமையாக எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் தீப்பிடித்தற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!