Tamilnadu
’அயன்’ படத்தையே மிஞ்சிய சம்பவம்.. அதிர்ச்சியடைந்த சென்னை விமானநிலைய அதிகாரிகள்!
சென்னை விமான நிலையத்தில் உள்ள பயணிகள் வருகை பகுதியை, விமான நிலைய ஒப்பந்த பணியாளர்கள் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தொழில் பாதுகாப்புப் படை வீரருக்கு, ல் ஒரு ஒப்பந்த ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதை அடுத்து பாதுகாப்புப் படை வீரா்,அந்த மாப்பைக் கழட்டிக் காட்டும் படி ஊழியரிடம் கூறியுள்ளார். பின்னர் மாப்பைக் கழட்டியபோது, மாப்பின் கைப்பிடி குழாய்க்குள் இருந்து தங்கப் பசை அடைத்த 10 பாக்கெட்கள் வெளியே வந்து விழுந்தன. இதைப்பார்த்துப் பாதுகாப்புப் படை வீரர் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அந்த அந்த 10 பாக்கெட்களையும் விமான நிலைய பாதுகாப்புப்படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். அந்த பாக்கெட்களில் மொத்தம் 1.811 கிலோ தங்கப் பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூபாய் 78 லட்சம். மேலும் இந்த சுத்தம் செய்யும் மாப்பில் எப்படித் தங்கப் பசை வந்தது என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள்! : நேரில் சென்று தீர்வுகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“ரோடு போடச் சொன்னால், நாடு பிடிப்பார்கள் தி.மு.கழகத்தின் தீரர்கள்!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!