Tamilnadu
பேரனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாத்தாவுக்கு நேர்ந்த கொடூரம்.. உறவினர்கள் அதிர்ச்சி!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் கீரை தோட்ட தெருவைச் சேர்ந்தவர் சுடைலையாண்டி இவரது பேரன் அஸ்வின் (8). 3 ஆம் வகுப்பு படிக்கும் பேரனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க சுடைலையாண்டி முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து பேரனை கீழப்பாவூர் உள்ள பெரிய குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவன் முதுகில் காலி பிளாஸ்டிக் கேன் கட்டி நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது திடீரென இந்நிலையில் சிறுவனின் முதுகில் கட்டி இருந்த காலி பிளாஸ்டிக்கேன் கழன்று விழுந்துள்ளது
இதனால் சிறுவன் தண்ணீரில் தத்தளித்துள்ளார். இதையடுத்து பேரனை சுடைலையாண்டி கரையில் சேர்க்க முயன்றபோது நீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவனைப் பத்திரமாக மீட்டனர். ஆனால் பல மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு சுடைலையாண்டியை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாத்தா குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கீழ்பாவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Also Read
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !