Tamilnadu
பேரனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாத்தாவுக்கு நேர்ந்த கொடூரம்.. உறவினர்கள் அதிர்ச்சி!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் கீரை தோட்ட தெருவைச் சேர்ந்தவர் சுடைலையாண்டி இவரது பேரன் அஸ்வின் (8). 3 ஆம் வகுப்பு படிக்கும் பேரனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க சுடைலையாண்டி முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து பேரனை கீழப்பாவூர் உள்ள பெரிய குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவன் முதுகில் காலி பிளாஸ்டிக் கேன் கட்டி நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது திடீரென இந்நிலையில் சிறுவனின் முதுகில் கட்டி இருந்த காலி பிளாஸ்டிக்கேன் கழன்று விழுந்துள்ளது
இதனால் சிறுவன் தண்ணீரில் தத்தளித்துள்ளார். இதையடுத்து பேரனை சுடைலையாண்டி கரையில் சேர்க்க முயன்றபோது நீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவனைப் பத்திரமாக மீட்டனர். ஆனால் பல மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு சுடைலையாண்டியை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாத்தா குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கீழ்பாவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Also Read
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
சென்னை மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் ஆதரிக்கும் பொதுமக்களின் ஆதரவு : ஆகஸ்ட்டில் 99.09 லட்சம் பேர் பயணம்!
-
திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!