Tamilnadu
பேரனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாத்தாவுக்கு நேர்ந்த கொடூரம்.. உறவினர்கள் அதிர்ச்சி!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் கீரை தோட்ட தெருவைச் சேர்ந்தவர் சுடைலையாண்டி இவரது பேரன் அஸ்வின் (8). 3 ஆம் வகுப்பு படிக்கும் பேரனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க சுடைலையாண்டி முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து பேரனை கீழப்பாவூர் உள்ள பெரிய குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவன் முதுகில் காலி பிளாஸ்டிக் கேன் கட்டி நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது திடீரென இந்நிலையில் சிறுவனின் முதுகில் கட்டி இருந்த காலி பிளாஸ்டிக்கேன் கழன்று விழுந்துள்ளது
இதனால் சிறுவன் தண்ணீரில் தத்தளித்துள்ளார். இதையடுத்து பேரனை சுடைலையாண்டி கரையில் சேர்க்க முயன்றபோது நீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவனைப் பத்திரமாக மீட்டனர். ஆனால் பல மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு சுடைலையாண்டியை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாத்தா குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கீழ்பாவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Also Read
-
“விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜின்” : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
-
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் முன்னனி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு!
-
தமிழ் மொழியுணர்வுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள... ‘உயிர் நிகர் தமிழ்‘ நூல்! : முழு விவரம் உள்ளே!
-
ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் 'வாஷிங் மெஷின்': பாஜக ஃபார்முலா மகாராஷ்டிர மாநிலத்தில் கிழிந்து தொங்குகிறது!
-
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் முதல் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வரை.. DMK MP-க்கள் அடுக்கடுக்கான கேள்வி