Tamilnadu
செல்போனில் பேசியதால் திட்டிய தந்தை.. விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி!
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் கீர்த்தனா. இவர் நம்பியூரில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கல்லூரி விடுமுறைக்காக கீர்த்தனா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த அவரது தந்தை மகளைத் திட்டி அவரிடம் இருந்து செல்போனை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.
இதனால் மன வேதனையடைந்த கீர்த்தனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை திட்டியதால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!