Tamilnadu
செல்போனில் பேசியதால் திட்டிய தந்தை.. விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி!
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் கீர்த்தனா. இவர் நம்பியூரில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கல்லூரி விடுமுறைக்காக கீர்த்தனா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த அவரது தந்தை மகளைத் திட்டி அவரிடம் இருந்து செல்போனை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.
இதனால் மன வேதனையடைந்த கீர்த்தனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை திட்டியதால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.க தயங்காது!” : த.வெ.க அரசுக்கு உதயநிதி எச்சரிக்கை!
-
தமிழகத்தை உலுக்கிய கும்மிடிப்பூண்டி 3 வயது வடமாநில சிறுமி வன்கொடுமை.. வேடிக்கை பார்க்கும் சிங்கப்பெண் படை
-
“நாடாளுமன்றத் தேர்தலின்போது மட்டும் ஆதரவைத் தேடுவதற்கு வெட்கமாக இல்லையா?” : காங்கிரசை சாடிய முரசொலி!
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!