Tamilnadu
"இந்திய அளவில் தமிழ்நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளதற்கு இதான் காரணம்": ஜெயரஞ்சன் சொன்னது என்ன?
பொது விநியோக திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதால் தமிழ்நாட்டில் விலைவாசி கட்டுக்கள் உள்ளது என திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயரஞ்சன், "வட மாநிலங்களில் விலைவாசி உயர்வு 27% வரை இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 4 % அளவில் குறைவாக உள்ளது.
பொது விநியோகத் திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்திவருகிறது. இத்திட்டங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் 500 கோடி ரூபாய் அரசு செலவு செய்கிறது. தானியங்களின் விலையேற்றம் 2.7% ஆக தான் உள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பு பொதுவிநியோக திட்டம் மூலம் பாமாயில் துவரம் பருப்பு வழங்கப்படுகிறது.
மேலும், சிறப்பு பொது விநியோக திட்டத்தின் மூலம் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுவதால் தமிழ்நாட்டில் உணவு பொருட்களின் விலையேற்றம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.ஒன்றிய அரசு குறைவான விலையில் பொது விநியோக திட்டத்திற்கான பொருட்களை வழங்கினால் இன்னும் கூடுதலான மக்கள் பயன் அடைவார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !