Tamilnadu
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தி 25 பேர் வன்கொடுமை : தம்பதியினர் உட்பட 27 பேர் கைது - பகீர் தகவல்!
புதுச்சேரி கோரிமேடு மோகன் நகர் பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலிஸார் அங்கு சென்று சோதனை செய்ததில், கடலூரை சேர்ந்த பாலாஜியும், அவரது மனைவி உமாவும் வீடு வாடகைக்கு எடுத்து 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பாலாஜியையும், அங்கிருந்த வாடிக்கையாளரான புதுவையை சேர்ந்த பச்சையப்பன் ஆகியோரை போலிஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து பாலாஜியிடம் நடத்திய விசாரணையில், அவரும் அவரது மனைவியும், சிறுமியை 20 வயது கல்லூரி மாணவி என கூறி பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியதியதும், இதுவரை 25 பேர் அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டது தெரியவந்து.
இதையடுத்து தம்பதியினர் உட்பட 27 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்து, 22 பேரை கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள உமா உள்பட 5 பேரை போலிஸார் தேடி வருகிறார்கள்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!