Tamilnadu
சென்னை வந்த இலங்கை பயணி மயங்கி விழுந்து உயிரிழப்பு.. விமான நிலையத்தில் பரபரப்பு!
இலங்கை நாட்டின் கொழும்பு நகரை சேர்ந்தவர் முகமது பாருக் (57). இவர் இலங்கையில் இருந்து இன்று காலை ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தார். இதையடுத்து முகமது பாருக் விமானத்திலிருந்து இறங்கி, குடியுறிமை, சுங்கம் சோதணைகளை முடித்துவிட்டு விமானநிலையத்திலிருத்து வெளியே வந்தாா். அப்போது அவர் திடீரனெ மயங்கி கீழே விழந்தார்.
இதையடுத்து சக பயணிகள், விமான நிலைய மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினா், முகமது பாருக்கை சோதனை செய்தனா். பின்பு அவா் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா்.
இது தொடர்பாக, சென்னை விமான நிலைய போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானநிலைய போலிஸா விரைந்து வந்து, முகமது பாருக்கின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!
-
‘வந்தே மாதரம்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ அனைத்தும் சமம் தான்!” : சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு!
-
கர்நாடகாவால் மாசுப்படும் தென்பெண்ணை ஆறு : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் குற்றச்சாட்டு!
-
வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு தி.மு.க MPக்கள் கேள்வி!