Tamilnadu
”இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கை”.. கேரள முதல்வரிடம் வழங்கிய முதலமைச்சர்!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவனந்தபுரம் சென்றுள்ளார்.
திருவனந்தபுரம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கோவளத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
அப்போது, இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கையைக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் The Dravidian Model என்ற புத்தகத்தையும் பரிசாக கொடுத்தார்.
இதையடுத்து திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!