Tamilnadu
குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவனுக்கு நடந்த துயரம்.. பெற்றோர்கள் அதிர்ச்சி!
சென்னை அடுத்த பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லி ராஜ். இவரது 4 வயது மகன் கிருஷ்ணா. சம்பவத்தன்று சிறுவன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்குக் குதிரை ஒன்று நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த சிறுவன் குதிரையின் வாலை பிடித்து விளையாடியுள்ளார்.
இதையடுத்து குதிரை திடீரென சிறுவனின் மார்பில் எட்டு உதைத்துள்ளது. இதில் சிறுவன் அலறியடித்து கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அருகே இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குதிரை எட்டி உதைத்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
1,256 முகாம்கள்.. 18 லட்சம் பேர் பயன்.. மக்களின் அமோக ஆதரவோடு முடிவுற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்!
-
11 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : கிராமக் கோயில் பூசாரிகள் மகிழ்ச்சி!
-
ஆன்மீக அன்பர்களும் இறை பற்றாளர்களும் விரும்பும் அரசு திராவிட மாடல் அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
தமிழ்நாட்டின் முதல் இரவு வான் பூங்கா : எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - 5 சிறப்புகள்!
-
‘நீதித்துறையில் ஊழல்’ என NCERT பாடத்தில் சர்ச்சை… நீதித்துறைக்கு பகிரங்கமான மிரட்டல் - முரசொலி தலையங்கம்!