Tamilnadu
குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவனுக்கு நடந்த துயரம்.. பெற்றோர்கள் அதிர்ச்சி!
சென்னை அடுத்த பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லி ராஜ். இவரது 4 வயது மகன் கிருஷ்ணா. சம்பவத்தன்று சிறுவன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்குக் குதிரை ஒன்று நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த சிறுவன் குதிரையின் வாலை பிடித்து விளையாடியுள்ளார்.
இதையடுத்து குதிரை திடீரென சிறுவனின் மார்பில் எட்டு உதைத்துள்ளது. இதில் சிறுவன் அலறியடித்து கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அருகே இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குதிரை எட்டி உதைத்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் - மோடி மவுனமாக இருப்பது ஏன்? : மம்தா பானர்ஜி கேள்வி!
-
அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல் : தோல்வி அச்சத்தில் பா.ஜ.க!
-
"28 சதவீத உச்சபட்ச GST வரிவிதிப்பு தேவையா?"- ஒன்றிய பாஜக அரசுக்கு பஜாஜ் நிர்வாக இயக்குனர் கண்டனம் !
-
‘குடிஅரசு’ பரவிய ஊரெங்கும் சுயமரியாத காற்று வீசியது - நூற்றாண்டு காணும் ‘குடிஅரசு’-க்கு முரசொலி வாழ்த்து!
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !