Tamilnadu
ஒரே ஆண்டில் ரூ.97 லட்சம் மோசடி.. மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரை பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் மத்திய கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், புதிய தொழில் தொடங்குவதற்கான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வங்கியின் கிளை மேலாளராக பணிபுரிந்து வந்தவர் உமா மகேஸ்வரி. இவர் மேல் கடந்த கடந்த 2018-19 ஆண்டு காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியது போல் போலி ஆவணம் தயாரித்து ரூ.97 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், உமா குற்றவாளி என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து உமா மகேஸ்வரியை இடைக்கால பணிநீக்கம் செய்து வேலூர் மத்திய கூட்டுறவு பொது மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவர் மோசடி செய்தது நிரூபனம் ஆனது.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வேலூர் கூட்டுறவு துணைப்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின்பேரில், வேலூர் வணிக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து உமாமகேஸ்வரியை கடந்த மே மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவர் சில நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த உமா மகேஸ்வரி ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், துறை ரீதியான விசாரணை முடிந்து தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!