Tamilnadu
Juice குடித்த மாணவிக்கு நடந்த கொடூரம்.. தாய் மருத்துவமனையில் சிகிச்சை: சோகத்தில் மூழ்கிய கிராமம்!
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிக்கு லட்சுமி பரியா என்ற மகள் இருந்தார். இவர் நெல்லையில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி சாந்தியும், மகள் லட்சுமி பிரியாவும் கயத்தாறில் உள்ள குளிர்பான கடையில் பழச்சாறு ஒன்றை பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த இருவரும் குடித்துள்ளனர். பின்னர் சில மணி நேரத்திலேயே இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரையும் அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மகள் லட்சுமி பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தாய் சாந்திக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பழச்சாறு கடையிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பழச்சாறு குடித்ததில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!