Tamilnadu
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு சாதனை.. பட்டதாரி பெண்ணுக்கு முதலமைச்சரின் இளைஞர் விருது அறிவிப்பு !
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த குரவபுலம் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனி. விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயது முதலே நெல் உள்ளிட்ட தானியங்கள் பயிரிடுவதால் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
பின்னர் அழிந்துவரம் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து வரும் வழக்கொழிந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளார். தனது விவசாய நிலையில், தமிழக நெல் ரகமான 174 ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1,250 நெல் ரகங்களை மீட்டு எடுத்துள்ளார்.
இந்த நிலையில், இவர் தமிழ்நாடு முதலமைச்சரின் இளைஞர் விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இவருக்கு வரும் சுதந்திர தினத்தின்று விருதும் ,ஒரு லட்சம் பரிசு தொகையும் முதலமைச்சர் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
இதேபோல சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது ஆஷிக் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“பாஜக ஒரு பாறாங்கள்.. அதை கட்டிக்கொண்டு தண்ணீரில் விழுந்தால்...” - நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கு!
-
“டில்லி சரணம் பாடி பழனிசாமி.. அதிகார பங்கிற்கு ஒரு கட்சியும் ஏறிட்டு பார்க்கவில்லை..” - கி.வீரமணி தாக்கு!
-
சென்னையில் புதிதாக 40,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்! : மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தகவல்!
-
“NDA கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார்? அ.தி.மு.க.வா? அல்லது பா.ஜ.க.வா?” : அமைச்சர் சேகர்பாபு கேள்வி!
-
“மக்களைக் கை கழுவிவிட்டு..‘நன்றாகக் கை கழுவிக் கொள்ளுங்கள்’ என்றவர் மோடி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!