Tamilnadu

“அ.தி.மு.க முன்னாள் MLA வீடு உட்பட 26 இடங்களில் IT ரெய்டு” : வருமானத்தை விட அதிகமாக 315% சொத்து குவிப்பு!

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின.

இந்நிலையில், நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாக புகார் வந்தது.

அதனைத்தொடர்ந்து கே.பி.பி.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார் என்று தெரியவந்தது.

மேற்படி வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315% அதிகமாகும். எனவே இது சம்பந்தமாக அவர்கள் மீது நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்துவருகிறது.

மேலும் இவ்வழக்கு மேற்படி வழக்கின் விசாரணை தொடர்பாக கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவரது அலுவலகங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் (நாமக்கல்-24, மதுரை-1, திருப்பூர்-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

குறிப்பாக நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அசோக் நகரில் கே.பி.பி.பாஸ்கர் வீடு உள்ளது இந்த வீடுகளில் மூன்று குழு கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று காலை 6.30 மணி முதல் வீட்டில் உள்ள பாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத் துறையில் சுமார் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வாகனங்களும் வந்து இந்த சோதனை ஈடுபட்டனர்.

Also Read: எஸ்.பி.வேலுமணி உறவினர்கள் வீட்டை அடுத்து SPK நிறுவனத்திலும் IT ரெய்டு : அடுத்தடுத்து சிக்கும் அ.தி.மு.க!