Tamilnadu
'யாரும் ஏமாந்துடாதிங்க'.. Loan App-ல் சிக்கலில் மாட்டிக் கொண்ட பெண்: கண்ணீர் மல்க புகார்!
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்க வாட்ஸ் ஆப்பில் Loan App லிங் ஒன்று வந்துள்ளது. இதை அவர் கிளிக் செய்து பார்த்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு 10 நாட்கள் கழித்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது.
இதில் பேசிய நபர், 'நீங்கள் வாங்கிய கடன் பணத்தைக் கொடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் 'நான் கடன் எதுவும் வாங்கவில்லை. அதனால் பணத்தைக் கொடுக்க முடியாது 'என கூறியுள்ளார்.
இதையடுத்து சில நாட்கள் கழித்து அந்த Loan App நிறுவனம் ஆபாசப் படங்களை அனுப்பி அவரை மிரட்டியுள்ளது. பின்னர் அந்த பெண் இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் Loan App-க்களை நம்பி யாரும் ஏமாந்துடாதிங்க என கண்ணீர் மல்க பாதிக்கப்ட்ட பெண் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!
-
இதைக்கூட சரி செய்ய துப்பு இல்லாமல் எதற்கு முதலமைச்சர் நாற்காலி : முரசொலி கடும் தாக்கு!