Tamilnadu
'யாரும் ஏமாந்துடாதிங்க'.. Loan App-ல் சிக்கலில் மாட்டிக் கொண்ட பெண்: கண்ணீர் மல்க புகார்!
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்க வாட்ஸ் ஆப்பில் Loan App லிங் ஒன்று வந்துள்ளது. இதை அவர் கிளிக் செய்து பார்த்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு 10 நாட்கள் கழித்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது.
இதில் பேசிய நபர், 'நீங்கள் வாங்கிய கடன் பணத்தைக் கொடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் 'நான் கடன் எதுவும் வாங்கவில்லை. அதனால் பணத்தைக் கொடுக்க முடியாது 'என கூறியுள்ளார்.
இதையடுத்து சில நாட்கள் கழித்து அந்த Loan App நிறுவனம் ஆபாசப் படங்களை அனுப்பி அவரை மிரட்டியுள்ளது. பின்னர் அந்த பெண் இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் Loan App-க்களை நம்பி யாரும் ஏமாந்துடாதிங்க என கண்ணீர் மல்க பாதிக்கப்ட்ட பெண் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
ஓமன் நாட்டில் பணிபுரிய அறிய வாய்ப்பு... சம்பளம் எவ்வளவு? என்ன பணி? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம் உள்ளே!
-
“திட்டத்தை முடக்க நினைத்தவரின் சதியை முறியடித்த முதலமைச்சர்...” - முரசொலி பாராட்டு!
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!