Tamilnadu
கொட்டும் மழையிலும் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கிய சிறுவன்.. வழுக்கும் பாறை மேல் ஒற்றை காலில் நின்று சாகசம் !
தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக விடாமல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால், கன்னியாகுமரியை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தளங்களை பார்வையிட முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கன்னியாகுமரி கடலுக்கும், பகவதி அம்மன் கோயிலுக்கும் இடையே இருக்கும் சுவற்றில், சிறுவன் ஒருவன் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்ட, இருப்பினும் அந்த சிறுவன் தனது தியானத்தில் முழுமையாக மூழ்கி கிடந்துள்ளார்.
இதையடுத்து அதே சுவற்றில், வழுக்கும் பாறையின் மீது ஒற்றை காலில் நின்று மீண்டும் தியானத்தில் ஈடுபட்டார்.
சிறுவனின் இந்த சாகச செயலை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் புகைப்படமாகவும், விடியோவாகவும் எடுத்தனர். ஆனால் அந்த சிறுவன் யார்? ஏன் அவ்வாறு செய்தார் என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. சிறுவன் தியானம் செய்த இந்த சுவரானது சரியாக விவேகானந்தரின் நினைவு மண்டபத்திற்கு நேர் எதிரில் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!