Tamilnadu
காணாமல் போன ’பொன்னியின் செல்வன்’ செம்பியன் மகாதேவி சிலை.. அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு !
கடந்த 2005 ஆம் ஆண்டு தஞ்சாவூரின் சரஸ்வதி மாளிகை அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த, தமிழில் முதல் முதலில் அச்சடிக்கப்பட்ட பைபிள் நூல் காணாமல் போனது. அப்போதிலிருந்து இந்த பைபிளை தேடும் பணியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் லண்டன் அரசர் வைத்துள்ள பொருட்களின் புகைப்படங்கள் வெளியானது. அந்த புகைப்படத்தில் தமிழ்நாட்டில் காணாமல் போன பைபிள் போன்ற ஒரு புத்தகம் இடம்பெற்றிருப்பதை தமிழ்நாட்டு காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சி.ஐ.டி பிரிவு கண்டுபிடித்துள்ளது.
கடந்த மாதம் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க, தற்போது சோழ வம்சத்தை சேர்ந்த சுமார் 1000 வருடத்திற்கு மேல் பழமையான செம்பியன் மகாதேவி உலோக சிலை அமெரிக்கா அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம், செம்பியன் மகாதேவி என்ற கிராமத்தில் உள்ள சிலை போலியானது எனவும், சுதந்திரத்திற்கு முன்பு காணாமல் போன சென்பியன் மகாதேவி சிலை தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளன. இதையடுத்து தற்போது இந்த சிலையை இந்தியாவுக்கு கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
செம்பியன் மகாதேவி என்பவர், சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராஜ ராஜ சோழனுக்கு பாட்டி முறையாகும். மேலும் இவர் பேரரசர் சுந்தர சோழருக்கு மனைவியும், மதுராந்தக சோழருக்கு தாயுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“திராவிட இயக்கம் எப்போதும் எழுத்தாளர்களை கொண்டாடும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழினப் பெருமைகளை உலகெங்கும் பறைசாற்றும் வகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு!
-
கரூர் துயரம் : நாளை விஜய்யிடம் 2 ஆம் கட்ட விசாரணை நடத்தும் சி.பி.ஐ!
-
பிப்.7 ஆம் தேதி திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு : தலைமைக் கழகம் அறிவிப்பு!