Tamilnadu
லேசான மழைக்கே தாங்காத ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம்.. வெளிவந்த அ.தி.மு.க ஆட்சியின் அவலம்!
வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.53 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அதிமுக ஆட்சியின் கட்டப்பட்ட இந்த புதிய பேருந்து நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டது.
வேலுரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முறையாக நடைபெறவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.
அதை மெய்ப்பிக்கும் வகையில் திறந்து சில நாட்களே ஆன நிலையில், வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு குறைகள் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், தற்போது வேலூர் சுற்றுவட்டார பகுதியில் லேசான மழை பெய்து வரும் நிலையில், புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரையிலிருந்து மழை நீர் ஒழுகியது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான வீடியோகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதிய பேருந்து நிலைய ஓட்டை குறித்து பேசிய அதிகாரிகள் ``கட்டடத்தின் மேற்கூரையில் கழுகு உள்ளிட்ட பறவைகள் வந்து கொத்துவதால் ஓட்டை ஏற்படுகிறது. அதை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தனர்.
Also Read
-
நீலகிரி செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. வனத்துறை விதித்த புதிய கட்டுப்பாடு - முழு விவரம் இங்கே !
-
12-ம் வகுப்புத் தேர்வில் சாதித்த ஒரே ஒரு திருநங்கை மாணவி... நேரில் சந்தித்து பாராட்டிய கனிமொழி எம்.பி !
-
“மோடி அரசுக்கு தோல்வி உறுதியாகி விட்டது - பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்”: எச்சரித்த ஆசிரியர் கி.வீரமணி!
-
குஜராத், உ.பி-யில் இருந்தே போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகிறது: தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு!
-
சவுக்கு சங்கர் மீது 8 வழக்கு.. மகளிர் ஆணையத்தில் பெண் காவலர்கள் அடுத்தடுத்து புகார் - நடந்தது என்ன?