Tamilnadu
லாரி சக்கரத்தில் சிக்கி தாய் பலி.. 5 வயது சிறுவன் கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள விடத்திலாம்பட்டியைச் சேர்ந்த தீனதயாளன் என்பவரது மனைவி அனுசூர்யா. இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் தன்வீர் என்ற மகன் உள்ளார்.
இவர் மணப்பாறை, விராலிமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் தனது மகனை பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து , அனுசூர்யா அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே செல்லும்போது பின்னால் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே லாரியின் சக்கரத்தில் சிக்கி அனுசூர்யா உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அறிந்த போலிஸார் அங்கு வந்து அனுசூர்யா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சக்திவேல் என்பதைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது தாய்க்கு என்ன நடந்து என்று தெரியாமல் சிறிய காயத்துடன் 5 வயது சிறுவன் அழுது கொண்டிருந்தது காண்போர் கண்களை கலங்கவைத்துள்ளது.
Also Read
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!