Tamilnadu
லாரி சக்கரத்தில் சிக்கி தாய் பலி.. 5 வயது சிறுவன் கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள விடத்திலாம்பட்டியைச் சேர்ந்த தீனதயாளன் என்பவரது மனைவி அனுசூர்யா. இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் தன்வீர் என்ற மகன் உள்ளார்.
இவர் மணப்பாறை, விராலிமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் தனது மகனை பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து , அனுசூர்யா அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே செல்லும்போது பின்னால் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே லாரியின் சக்கரத்தில் சிக்கி அனுசூர்யா உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அறிந்த போலிஸார் அங்கு வந்து அனுசூர்யா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சக்திவேல் என்பதைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது தாய்க்கு என்ன நடந்து என்று தெரியாமல் சிறிய காயத்துடன் 5 வயது சிறுவன் அழுது கொண்டிருந்தது காண்போர் கண்களை கலங்கவைத்துள்ளது.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!