Tamilnadu
இறந்த குட்டியின் சடலத்தை 2 நாளாக தூக்கிச்சுற்றும் தாய் குரங்கு.. காண்போரை உருகவைக்கும் வீடியோ!
பொதுவாக மனிதர்களுக்கு இருக்கும் சில உணர்வுகளை நாம் சில விலங்குகளிடம் காண முடியும். அதில் பிரதமான ஒன்று தான் பாசம். அதிலும் தாய் பாசம் என்பது விலங்குகளிடம் சற்று அதிகமாகவே காணப்படும். குறிப்பாக குரங்கு, நாய் போன்ற விலங்குகளிடம் நாம் அந்த பாசத்தை உணரமுடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய வண்டியில் மாடு ஒன்றை கூட்டிசெல்லும்போது, அதன் பின்னே கோழி ஒன்று கத்திகொண்டே சென்றது. இது குறித்த வீடியோ வைரலானது. மேலும் அண்மையில் கொல்கத்தாவில் தாய் யானை ஒன்று இறந்த தனது குட்டியை இரண்டு நாட்களாக தூக்கி சுமந்த வீடியோவும் வெளியாகி காண்போர் நெஞ்சத்தை கலங்க வைத்தது.
இது போன்ற ஒரு சம்பவம் ஒன்று உதகையில் நடந்துள்ளது. உதகை மலைப்பிரதேசம் நிறைந்த ஒரு பகுதி. இங்கே குரங்கு, கரடி, யானை, சிறுத்தை போன்ற விலங்குகள் அங்கே காணப்படுகின்றன.
இந்த நிலையில், உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப்பாதையில் கடந்த 2 நாளாக தாய் குரங்கு ஒன்று தனது இறந்த குட்டியின் சடலத்தை தூக்கிக்கொண்டு சுற்றி அழைந்து வருகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இதனை காண்போர் நெஞ்சை உருக வைக்கிறது.
இதனை பலரும் இணையத்தில் பகிர்ந்து தாய் குரங்கின் நிலையை எண்ணி வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!