Tamilnadu
விமானம் மூலம் சென்னை வந்த வாக்குப்பெட்டி.. தலைமை செயலகத்தில் தயாராகும் குடியரசுத் தலைவர் தேர்தல் பணி!
இந்திய நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக 2017-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையில் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனிடையே காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். அதேபோல் பா.ஜ.க கூட்டணி சார்பாகத் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். பின்னர், இருவரும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து திரௌபதி முர்மு,யஷ்வந்த் சின்ஹா ஆகிய இருவரும் மாநிலம் முழுவதும் சென்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் அனைத்து மாநில சட்டமன்றத்திலும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜூலை 18-ல் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. டெல்லி இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வந்த வாக்குப்பெட்டிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!