Tamilnadu
விமானம் மூலம் சென்னை வந்த வாக்குப்பெட்டி.. தலைமை செயலகத்தில் தயாராகும் குடியரசுத் தலைவர் தேர்தல் பணி!
இந்திய நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக 2017-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையில் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனிடையே காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். அதேபோல் பா.ஜ.க கூட்டணி சார்பாகத் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். பின்னர், இருவரும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து திரௌபதி முர்மு,யஷ்வந்த் சின்ஹா ஆகிய இருவரும் மாநிலம் முழுவதும் சென்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் அனைத்து மாநில சட்டமன்றத்திலும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜூலை 18-ல் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. டெல்லி இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வந்த வாக்குப்பெட்டிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!