Tamilnadu
விமானம் மூலம் சென்னை வந்த வாக்குப்பெட்டி.. தலைமை செயலகத்தில் தயாராகும் குடியரசுத் தலைவர் தேர்தல் பணி!
இந்திய நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக 2017-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையில் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனிடையே காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். அதேபோல் பா.ஜ.க கூட்டணி சார்பாகத் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். பின்னர், இருவரும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து திரௌபதி முர்மு,யஷ்வந்த் சின்ஹா ஆகிய இருவரும் மாநிலம் முழுவதும் சென்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் அனைத்து மாநில சட்டமன்றத்திலும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜூலை 18-ல் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. டெல்லி இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வந்த வாக்குப்பெட்டிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !