Tamilnadu
"வருமான வரித்துறையை குறைசொல்ல தெம்பில்லாமல் திமுக மீது சீறுகிறார்".. பழனிசாமி மீது ஆர்.எஸ்.பாரதி தாக்கு!
வருமான வரித்துறையை குறைசொல்ல தெம்பில்லாமல் தி.மு.க மீது சீறுகிறார் எடப்பாடி பழனிசாமி என அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "அ.தி.மு.க-வின் வன்முறையை மக்களுக்கு எடுத்துக்காட்டிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி.
முதலமைச்சர் ஸ்டாலினை பற்றியும், தி.மு.க-வை பற்றியும் குறை கூற வேண்டும் என எடப்பாடி நினைக்கிறார். தி.மு.க-வும். அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?. எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின் அ.தி.மு.கவில் எப்பொழுதும் அடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
தி.மு.க-வை பொறுத்தவரை நாங்கள் எந்த கட்சியையும் அழிக்க நினைத்தது கிடையாது. தி.மு.க-வை அழித்து விடுவேன் என ஜெயக்குமார் கூறுவது தவறு. வன்முறை நடக்கும் போது சீல் வைப்பது அரசின் கடமை. உங்களுக்கு வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாடுங்கள். நீதிமன்றம் அ.தி.மு.க அலுவலகத்தை திறக்கச் சொன்னால், நீதிமன்ற உத்தரவை மதிப்போம்.
வருமான வரித்துறையை குறைசொல்ல தெம்பில்லாமல் தி.மு.க மீது சீறுகிறார் பழனிசாமி. ஓ.பி.எஸ் எங்களுக்கு ஏன் ஆதரவாக செயல்பட வேண்டும். கொடநாடு வழக்கு விரைந்து விசாரிக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் வழக்கு இன்னும் சில நாட்களில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வரும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
- 
	    
	      ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !