Tamilnadu
"வருமான வரித்துறையை குறைசொல்ல தெம்பில்லாமல் திமுக மீது சீறுகிறார்".. பழனிசாமி மீது ஆர்.எஸ்.பாரதி தாக்கு!
வருமான வரித்துறையை குறைசொல்ல தெம்பில்லாமல் தி.மு.க மீது சீறுகிறார் எடப்பாடி பழனிசாமி என அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "அ.தி.மு.க-வின் வன்முறையை மக்களுக்கு எடுத்துக்காட்டிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி.
முதலமைச்சர் ஸ்டாலினை பற்றியும், தி.மு.க-வை பற்றியும் குறை கூற வேண்டும் என எடப்பாடி நினைக்கிறார். தி.மு.க-வும். அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?. எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின் அ.தி.மு.கவில் எப்பொழுதும் அடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
தி.மு.க-வை பொறுத்தவரை நாங்கள் எந்த கட்சியையும் அழிக்க நினைத்தது கிடையாது. தி.மு.க-வை அழித்து விடுவேன் என ஜெயக்குமார் கூறுவது தவறு. வன்முறை நடக்கும் போது சீல் வைப்பது அரசின் கடமை. உங்களுக்கு வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாடுங்கள். நீதிமன்றம் அ.தி.மு.க அலுவலகத்தை திறக்கச் சொன்னால், நீதிமன்ற உத்தரவை மதிப்போம்.
வருமான வரித்துறையை குறைசொல்ல தெம்பில்லாமல் தி.மு.க மீது சீறுகிறார் பழனிசாமி. ஓ.பி.எஸ் எங்களுக்கு ஏன் ஆதரவாக செயல்பட வேண்டும். கொடநாடு வழக்கு விரைந்து விசாரிக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் வழக்கு இன்னும் சில நாட்களில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வரும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!