Tamilnadu
ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் திமிங்கல கழிவுகளை கடத்திய கும்பல்.. 6 பேரை மடக்கி பிடித்த தமிழ்நாடு போலிஸ் !
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை பாலம் அருகில் அம்பர்கிரிஸ் (திமிங்கல உமிழ்நீர்) கடத்தி விற்பனை செய்ய இருப்பதாக தஞ்சாவூர் குற்ற நுண்ணறிவு பிரிவு போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து குற்ற நுண்ணறிவு போலிஸார் மற்றும் கோடியக்கரை வனத்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது 4 இருசக்கர வாகனத்தில் அம்பர்கீரிஸை கடத்தி வந்தவர்களை சோதனை செய்தபோது மறைத்து கடத்தி வந்த 3 கிலோ 750 கிராம் எடைக் கொண்ட ரூபாய் 1 கோடி மதிப்புடைய அம்பர் கிரிஸ் கைப்பற்றினர்.
அம்பர் கிரிசை கடத்தி விற்பனை செய்ய முயன்றதாக வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறைசேர்ந்த ஆண்டவர், சிவலிங்கம், மணிவாசகன், நாகையைச் சேர்ந்த இளையராஜா, ஓம்பிரகாஷ், திருத்துறைப்பூண்டி சேர்ந்த சரவணன் ஆகிய 6 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் 4 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபாய் 1 கோடி மதிப்புள்ள அம்பர்கீரிஸ் வேதாரண்யம் பகுதியில் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இதுபோன்ற பிரதமர் நமக்கு வேண்டாம்... சிந்தித்து வாக்களியுங்கள் - பட்டியலிட்டு மோடியை விமர்சித்த துருவ் ரதீ
-
சட்டையை மாற்றி பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... “தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?” - குவியும் கண்டனம்!
-
“பாஜகவிடம் இருந்து அனைத்தையும் காப்பாற்றுவதற்கான தேர்தல் இது” - தேஜஸ்வி தாக்கு !
-
பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... பாஜக ஆளும் உ.பி-யில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி... வீடியோ வைரல் !
-
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு.. பாஜக ஆதரவாளரை கைது செய்த கர்நாடக போலிஸ்... கொந்தளிக்கும் பாஜக தலைவர்கள்!