Tamilnadu
ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் திமிங்கல கழிவுகளை கடத்திய கும்பல்.. 6 பேரை மடக்கி பிடித்த தமிழ்நாடு போலிஸ் !
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை பாலம் அருகில் அம்பர்கிரிஸ் (திமிங்கல உமிழ்நீர்) கடத்தி விற்பனை செய்ய இருப்பதாக தஞ்சாவூர் குற்ற நுண்ணறிவு பிரிவு போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து குற்ற நுண்ணறிவு போலிஸார் மற்றும் கோடியக்கரை வனத்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது 4 இருசக்கர வாகனத்தில் அம்பர்கீரிஸை கடத்தி வந்தவர்களை சோதனை செய்தபோது மறைத்து கடத்தி வந்த 3 கிலோ 750 கிராம் எடைக் கொண்ட ரூபாய் 1 கோடி மதிப்புடைய அம்பர் கிரிஸ் கைப்பற்றினர்.
அம்பர் கிரிசை கடத்தி விற்பனை செய்ய முயன்றதாக வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறைசேர்ந்த ஆண்டவர், சிவலிங்கம், மணிவாசகன், நாகையைச் சேர்ந்த இளையராஜா, ஓம்பிரகாஷ், திருத்துறைப்பூண்டி சேர்ந்த சரவணன் ஆகிய 6 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் 4 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபாய் 1 கோடி மதிப்புள்ள அம்பர்கீரிஸ் வேதாரண்யம் பகுதியில் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!