Tamilnadu
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.. முகக்கவசம் அணியாவிட்டால்? : மாநகராட்சி அதிரடி உத்தரவு என்ன?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், திரையரங்கு, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
5 பத்திரியாளர்களை கொலை செய்த இஸ்ரேல்... மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய கொடூரம் !
-
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் திருப்பூர்... பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருப்பூர் MP கடிதம்
-
நீலக்கொடி சான்றிதழ் பெற அழகுபடுத்தப்படும் தமிழ்நாட்டின் 6 கடற்கரைகள்: ரூ.24 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
-
“இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! ஜனநாயகம் தழைக்கும்!”: பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
-
வாக்கு திருட்டு - பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!