Tamilnadu
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.. முகக்கவசம் அணியாவிட்டால்? : மாநகராட்சி அதிரடி உத்தரவு என்ன?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், திரையரங்கு, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!