Tamilnadu
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.. முகக்கவசம் அணியாவிட்டால்? : மாநகராட்சி அதிரடி உத்தரவு என்ன?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், திரையரங்கு, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?
-
11 வீரர்களுக்கு பதில் 5 வீரர்கள்: பார்ம் இல்லாத அணியை கொண்டு உலககோப்பைக்கு செல்லும் இந்தியா - ஒரு பார்வை!