Tamilnadu
கெட்டுபோன மீன நீங்க சாப்பிடுவீங்களா?: வாக்குவாதம் செய்த உரிமையாளர்கள்: 300 கிலோ பறிமுதல் செய்த அதிகாரி!
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அணையில் மகிழ்ச்சியாகக் குளித்து விட்டுச் சுடச்சுட அங்கு விற்கப்படும் மீன்களைச் சுற்றுலாப் பயணிகள் ஒருபிடி பிடிப்பர்.
இந்நிலையில் மேட்டூர் அணை அருகே உள்ள மீன் விற்பனை கடைகள் மீது தொடர் புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது கெட்டுப்போன மீன்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வர்ணம் பூசப்பட்ட மீன்கள் விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து 300 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.
மேலும் மீன் கடை உரிமையாளர்களிடம் இப்படி கெட்டுப்போன மீன்களை நீங்கள் சாப்பிடுவீங்களா? , இதை விற்பனை செய்யலாமா? என சரமாரியாகக் கோபத்துடன் கேள்வி எழுப்பினர். இதையடுத்து கெட்டுப்போன மீன்களை விற்ற கடைக்கு எச்சரிக்கை நோட்டிஸ் அளிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை அருகே 300 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!