Tamilnadu
ஆர்டர் செய்ததோ மட்டன் பிரியாணி.. வந்ததோ கரப்பான் பூச்சி பிரியாணி: வாடிக்கையாளர் கடும் அதிர்ச்சி !
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அருகே 5 STAR என்ற அசைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த 5 STAR உணவகத்திற்கு வாடிக்கையாளர்கள் ஏராளம். முழு அசைவ உணவகமான இதில், சிக்கன், மட்டன், மீன் என்று பலவகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் மூர்த்தி என்பவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு அந்த உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மட்டன் பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அதில் கரப்பாண்பூச்சி தென்பட்டதால் இருவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அந்த கடையின் ஊழியரிடம் மூர்த்தி மற்றும் அவரது மனைவி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதான முயற்சி செய்த போதும் அது பயனற்று போனது.
பசியுடன் ஆசையாய் மட்டன் பிரியாணி சாப்பிட வந்த தம்பதியினர், பிரியாணியில் ஆடுக்கு பதிலாக கரப்பான் பூச்சியை பார்த்ததால், அரைகுறை பசியுடன் சண்டையிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிலிண்டர் தட்டுப்பாடு... மின்சாரம் யூனிட்டிற்கு ரூ.2 மானியம்... சலுகைகளை அறிவித்த முதலமைச்சர்!
-
“100 கி.மீ தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!” : கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உரை!
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
-
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் ஓய்வூதிய உயர்வு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!