Tamilnadu
கால்வாயில் குளித்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்: நண்பர்கள் கண் எதிரே நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காகப் பூண்டி நீர் தேக்கத்திலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்புக் கால்வாய் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் ஹரிஷ். இளைஞரான இவர் தனது நண்பர்கள் மற்றும் சகோதரனுடன் இணைப்புக் கால்வாயில் குளிக்கச் சென்றுள்ளார்.
அங்கு அனைவரும் உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஹரிஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதைப்பார்த்து நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு உடனே தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே அங்கு வந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் அடித்துச் செல்லப்பட்ட ஹரிஷ் உடலைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணா இணைப்புக் கால்வாயில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !