Tamilnadu
விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட ஒன்றிய இணை அமைச்சர்: காரணம் என்ன?
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய இணையமையச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு சென்ற அவர் , விமான நிலையத்துக்கு உள்ளே செல்ல முயன்றுள்ளார். அப்போது அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஒரு சில நிமிடங்கள் உள்ளே விடாமல் நிறுத்தி வைக்கப்பட்ட அவர் பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். ஒன்றிய இணை அமைச்சர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்ட காரணம் வெளியாகியுள்ளது.அதன் படி எல்.முருகன் மற்றும் அவருடன் வந்த நபர்கள் விமான நிலையத்திற்கு உள்ளே செல்ல ஏற்கனவே முன்அனுமதி பெற்றுள்ளனர்.
ஆனால், அந்த அனுமதி அட்டையை வைத்திருந்த நபர்கள் வர தாமதமானதால் எல்.முருகனுக்கும் உள்ளே வர அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!