Tamilnadu
அக்னிபாத் முடித்தால் மருத்துவத்தில் சேரலாமா? பைத்தியக்கார கூட்டம்: அண்ணாமலையை சாடிய தி.மு.க MP!
நாடுமுழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில்களுக்கு தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
அதுமட்டுமல்லாது பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்து பேசிய பா.ஜ.க தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களை சூரையாடி தீ வைத்ததால் பெரும் வன்முறைகாடாக அப்பகுதிகள் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் வட மாநிலங்களில் பல்வேறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் "நமது ஆயுதப்படையே மேலும் வலுப்படுத்தவே அக்னிபாத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நமது ஆயுதப்படையின் தன்மையை இளமையாக்க உதவும். தேசபக்தி மற்றும் துணிச்சலான இளைஞர்களை அக்னிபாத் திட்டம் உருவாக்கும்." என்று கூறியுள்ளார்.
அண்ணாமலையின் கருத்துக்கு பல்வேறு இணையவாசிகள் காட்டமாக விமர்சித்து வந்தநிலையில் அண்ணாமலையின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அதில், "அக்னிபாத் அருமையான திட்டம் என்று உளறும் 10 ஆம் வகுப்பு முடித்தவனுக்கு +2 பாஸ் என்று கொடுத்தால் எவ்வளவு மார்க் போடுவீங்க. அவர்கள் மருத்துவர், பொறியியல் போன்ற படிப்புகளில் இதை வைத்து சேரலாமா. பைத்தியக்கார கூட்டம்.." என்று காட்டமாக விமர்சித்துள்ளார். அவரின் இந்த கருத்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!