Tamilnadu
”நீ எடப்பாடி ஆளான்னு கேட்டு வாயில குத்திட்டாங்க” : ரத்தம் வழிய பேசிய அ.தி.மு.க நிர்வாகி!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளராக, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீரீசெல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமையின் கீழ் அ.தி.மு.க செயல்பட வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கடந்த 5 நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செலவம் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலேயே ஜெயக்குமார் மீது ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்றும் அ.தி.முக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
மேலும் எடப்பாடி ஆதரவாளரா என கூறி ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அங்கிருந்த அ.தி.மு.க நிர்வாகியை கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து காயம் அடைந்த அ.தி.மு.க நிர்வாகி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”நீ என்ன ஜெயக்குமார் கூட வர, நீ என்ன எடப்பாடி ஆளா என கூறி வாயிலேயே குத்திட்டாங்க” என தெரிவித்துள்ளார். அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலேயே இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ளமோதல் பொதுமக்கள் மத்தியில் முகசுளிப்பு ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!