Tamilnadu
தண்ணீர் தொட்டி மீது படுத்துத் தூங்கிய இளைஞருக்கு நடந்த கொடூரம்.. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சென்னை அடுத்த பல்லாவரம் பகுதியில் உள்ள கண்ணபிரான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் விக்கி. இவர் அதே பகுதியில் வீடுகளுக்கு டிஷ் அண்டனா பொருத்தும் தொழில் நடத்தி வந்தார்.
இந்நிலையில், விக்கி நேற்று வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி படுத்துத் தூங்கியுள்ளார். இதையடுத்து, நள்ளிரவில் தூக்கக் கலக்கத்தில் தண்ணீர் தொட்டியின் மேலிருந்து கீழே உருண்டு விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து காலையில் எழுந்து பெற்றோர் மகன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் விக்கி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி மீது படுத்துத் தூக்கிய வாலிபர் தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!