Tamilnadu
"ஆளுநரின் பேச்சு தேசத்திற்கு நல்லதல்ல".. தொல். திருமாவளவன் கடும் சாடல்!
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்கம் சார்பில் மனித சங்கலி இயக்கம் நடைபெற்றது. இதில் வி.சி.க தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க தொல். திருமாவளவன், "குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தில் உள்ள வயது வரம்பு 18 ஆக உயர்த்த வேண்டும். குழந்தைகள் கல்வி மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்தியா முழுவதும் நுபுல் சர்மாவையும் நவீன் ஜிண்டாலை கைது செய்ய வேண்டும் என்று மட்டும் போராட்டம் நடைபெறவில்லை. அவர்களின் மத வெறுப்பு அரசியலுக்கு எதிராக தான் மக்கள் போராடுகிறார்கள்.
சனாதன தர்மம் தான் இந்தியாவை உருவாக்கியது என்று ஆளுநர் ரவி அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்டவர் என்பதை 100 சதவீதம் காட்டியுள்ளது.மேலும், ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு தேசத்திற்கும் நல்லதல்ல. அவர் வகிக்கும் பொறுப்புகளுக்கும் நல்லதல்ல" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழுக்காக ஒன்றிய அரசு செலவு செய்த தொகை எவ்வளவு?” - தயாநிதி மாறன் எம்.பி. சரமாரி கேள்வி!
-
“முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்!” : முரசொலி தலையங்கம்!
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!