Tamilnadu
தம்பி.. வணக்கம் தமிழ்நாடு: 44வது செஸ் ஒலிம்பியாட் லோகோ - சின்னத்தை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோக மற்றும் சின்னத்தைச் சென்னை ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான 50 நாட்கள் கவுன்டவுனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதேபோல்,#ChessChennai2022 என்ற ஹாஷ் டாகை முதலமைச்சர் வெளியிட அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் பெற்றுக்கொண்டார்.குதிரை வடிவிலான வெளியிடப்பட்ட சின்னத்துக்குத் தம்பி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்தியா சார்வில் இந்த போட்டியில் 20 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ், சசிகிரண், அதிபன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !