Tamilnadu
தம்பி.. வணக்கம் தமிழ்நாடு: 44வது செஸ் ஒலிம்பியாட் லோகோ - சின்னத்தை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோக மற்றும் சின்னத்தைச் சென்னை ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான 50 நாட்கள் கவுன்டவுனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதேபோல்,#ChessChennai2022 என்ற ஹாஷ் டாகை முதலமைச்சர் வெளியிட அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் பெற்றுக்கொண்டார்.குதிரை வடிவிலான வெளியிடப்பட்ட சின்னத்துக்குத் தம்பி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்தியா சார்வில் இந்த போட்டியில் 20 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ், சசிகிரண், அதிபன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
“விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜின்” : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
-
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் முன்னனி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு!