Tamilnadu
தம்பி.. வணக்கம் தமிழ்நாடு: 44வது செஸ் ஒலிம்பியாட் லோகோ - சின்னத்தை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோக மற்றும் சின்னத்தைச் சென்னை ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான 50 நாட்கள் கவுன்டவுனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதேபோல்,#ChessChennai2022 என்ற ஹாஷ் டாகை முதலமைச்சர் வெளியிட அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் பெற்றுக்கொண்டார்.குதிரை வடிவிலான வெளியிடப்பட்ட சின்னத்துக்குத் தம்பி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்தியா சார்வில் இந்த போட்டியில் 20 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ், சசிகிரண், அதிபன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!