Tamilnadu
சாலையில் சென்றபோது திடீரென வெடித்து தீ பிடித்த சொகுசு கார்.. பொதுமக்களை பதறவைத்த சம்பவம்!
சென்னை, அண்ணா நகர் மேற்கு ஜீவன் பீமா நகரைச் சேர்ந்தவர் கணேசன். தொழிலதிபரான இவர் திருமங்கலத்திலிருந்து உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக இனோவா சொகுசு காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, திடீரென சொகுசு கார் பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் காரில் தீ பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த சாலையிலிருந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இது குறித்து உடனே தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.பின்னர் காரில் சிக்கியிருந்த கணேசனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்து தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !