Tamilnadu
பா.ஜ.கவுக்கு ஆதரவாக முகநூல் பதிவு.. குவிந்த புகார் - காவலர் மீது நடவடிக்கை எடுத்து எஸ்.பி அதிரடி!
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அம்பாத்துரை காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ச்சியாக பா.ஜ.க கட்சி தொடர்பான செய்திகளைப் பதிவிட்டும், பகிர்ந்தும் வந்துள்ளார்.
அதேபோல் இந்துத்துவா கருத்துகளையும் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இவர் மீது தொடர்ச்சிய புகார் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இவரின் சமூக வலைதளப் பக்கத்தை போலிஸார் ஆய்வு செய்தபோது, ஒரு சார்பாகவே அனைத்து பதிவுகளும் இருந்தது தெரியவந்தது.
பின்னர் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் காவல் சுரேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அரசுத் துறைகளில் பணியாற்றுபவர்கள் எந்த கட்சி மற்றும் மதங்களைச் சாராதவராக நடுநிலையோடு இருந்து பணியாற்ற வேண்டும் என்ற விதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!
-
நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!