Tamilnadu
பா.ஜ.கவுக்கு ஆதரவாக முகநூல் பதிவு.. குவிந்த புகார் - காவலர் மீது நடவடிக்கை எடுத்து எஸ்.பி அதிரடி!
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அம்பாத்துரை காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ச்சியாக பா.ஜ.க கட்சி தொடர்பான செய்திகளைப் பதிவிட்டும், பகிர்ந்தும் வந்துள்ளார்.
அதேபோல் இந்துத்துவா கருத்துகளையும் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இவர் மீது தொடர்ச்சிய புகார் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இவரின் சமூக வலைதளப் பக்கத்தை போலிஸார் ஆய்வு செய்தபோது, ஒரு சார்பாகவே அனைத்து பதிவுகளும் இருந்தது தெரியவந்தது.
பின்னர் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் காவல் சுரேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அரசுத் துறைகளில் பணியாற்றுபவர்கள் எந்த கட்சி மற்றும் மதங்களைச் சாராதவராக நடுநிலையோடு இருந்து பணியாற்ற வேண்டும் என்ற விதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!