Tamilnadu
“விமான நிலைய வளாகத்திற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர்” : பயணிகளை நடுங்க வைத்த பகீர் சம்பவம்!
சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலைய அத்தாரிட்டி கேண்டியன் உள்ளது. அதன் அருகே நேற்று இரவு, சுமார் 40 வயதுடைய ஆண் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து அங்கு பணியிலிருந்த விமான நிலைய ஊழியர்கள், சென்னை விமான நிலைய போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சென்னை விமான நிலைய போலிஸார் விரைந்து வந்து உடலை ஆய்வு செய்தனா். உடலில் வெளியே காயங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த நபர் யார்? எப்படி இறந்தார்? என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் இவர் ரமேஷ் என்றும், கடந்த சில ஆண்டுகளாகவே, சென்னை விமான நிலையத்தில் பிரி பெய்ட் டாக்ஸிகளை சுத்தம் செய்வது, டிராலிகளை தள்ளுவது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். மேலும் இவா் குடிபோதைக்கு அடிமையானவா் என்று தெரியவந்துள்ளது.
எனவே இவா் அளவுக்கதிகமான மது போதையில் உயிரிழந்தாரா?இல்லையேல் வேறு காரணம் எதாவது உண்டா? என்று போலிஸார் விசாரிக்கின்றனர். பிரேத பரிசோதனையின் முடிவில் தான் தெரியும் என்று கூறப்படுகிறது. விமான நிலையத்திற்குள் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!
-
குஜராத், உத்தர பிரதேசத்தில் தேர்தல் விதிகளை மீறிய பாஜக : வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்!
-
"அரசியல் ஆதாயத்துக்காக வெறுப்புணர்வை ஊக்குவிக்கும் பா.ஜ.க" : சோனியா காந்தி MP குற்றச்சாட்டு!
-
வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்? : தேர்தல் ஆணையத்திற்கு தொல்.திருமாவளவன் MP கேள்வி!
-
வாக்களிக்க விடாமல் இஸ்லாமியர்கள் மீது போலீசார் கொடூரத் தாக்குதல் - தலைவிரித்தாடும் பாஜகவின் அராஜகம்!