Tamilnadu
குளிர்பானம் குடித்து பானிபூரி சாப்பிட்ட சிறுவன்.. வலிப்பு வந்து பரிதாப பலி: பெற்றோர் அதிர்ச்சி!
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி திவ்யா, இவர்களுக்கு யுவராஜ்,வசந்தகுமார், ஈஸ்வரன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர் இதில் வசந்தகுமார் துரைப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சகோதரர்கள் மூன்று பேரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த கடை ஒன்றில் வசந்தகுமார் சாக்லேட் மில்க் வாங்கி குடித்துள்ளார். பிறகு உடனே சாலையோரம் இருந்த கடையில் பானிபூரியும் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
பிறகு வீட்டிற்குச் செல்லும்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு சிறுவன் கீழே விழுந்துள்ளான். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு வசந்தகுமாரைச் சோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுவன் குளிர்பானம் வாங்கி குடித்த கடையிலும், பானிபூரி கடையிலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கானத்தூரில் விளையாடிய இளைஞர் குளிர்பானத்துடன் சிப்ஸ் சாப்பிட்ட மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அடுத்து தற்போது, மற்றொரு சிறுவன் குளிர்பானம் காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!