Tamilnadu
எச்சரிக்கையை மீறி ஓடும் ரயிலில் ஏறி சாகசம் செய்த கல்லூரி மாணவர்கள்.. 19 வயது வாலிபர் தவறி விழுந்து பலி!
திருவள்ளூர் அருகே இரண்டு தினங்களுக்கு முன் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாநில கல்லூரி மாணவர் நீதிதேவன் (19) அதற்கு முன்னதாக சக நண்பர்கள் உடன் ஓடும் ரயிலில் சாகசம் செய்த பரபரப்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பாக மாநிலக் கல்லூரி மாணவர் நீதிதேவன் என்பவர் சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் வந்து கொண்டிருந்தபோது திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை - வேப்பம்பட்டு இடையே ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
அதற்கு முன்பாக ரயிலில் சக நண்பர்களுடன் இணைந்து அவர் சாகசம் செய்த பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து மாணவர்கள் பேருந்து ரயிலில் சாகசம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் எச்சரித்திருந்ததை மீறியும் மாணவர்கள் இதுபோன்ற சாகசத்தை மேற்கொண்டு உயிரிழப்பது வேதனை அடையச் செய்துள்ளது.
Also Read
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க 5 ஆண்டு திட்டம்! : முழு முனைப்பில் தமிழ்நாடு அரசு!
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ போட்டிகள்! : மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!