Tamilnadu
பாலியல் வன்கொடுமை செய்து மீனவப் பெண் எரித்துக்கொலை.. வடமாநில இளைஞர்களை தட்டி தூக்கிய போலிஸ்!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், கடற்கரை பகுதியில் கடல்பாசி சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணை வழிமறுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மேலும் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாத மணைவியைத் தேடி அவரது கணவர் அழைந்துள்ளார். அப்போது கடற்கரை அருகே இருந்தே முட்புதரின் பாதி எரிந்த நிலையில் தனது மனைவியை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்தபோலிஸார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலிஸார் வழக்குபதிவு விசாரணை நடத்தியதில், இறால் பண்ணையில் வேலைப்பார்த்த 2 இளைஞர்களை போலிஸார் கைது செய்துள்ளனர். அதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ், ரஞ்சன் ராணா ஆகியோர் என தெரியவந்தது. மேலும் மீனவப்பெண்ணின் நகைகளை திருடி விற்க முயன்றதும் விசாரணையில் அம்பலமானது. மேலும் அவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!