Tamilnadu
ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த பெண்குரங்கு.. இளைஞரின் மனிதாபிமான செயல் : நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்!
புதுச்சேரி அருகே மதகடிப்பட்டு கிராமத்தில் பெண் குரங்கு ஒன்றுக்குக் காயம் ஏற்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்துக் கொண்டிருந்தது. இதை அந்தவழியாகச் சென்று இளைஞர் ஒருவர் கவனித்துள்ளார். பிறகு சற்றும் தாமதிக்காமல் உடனே தனது தொலைப்பேசியை எடுத்து கால்நடை மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர், இந்த இளைஞர் குரங்கின் கை, கால்களைக் கட்டி முதலுதவி அளித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள் குரங்கிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர்கள் வருவதற்குள்ளே, மயக்கம் தெளிந்தவுடன் குரங்கு அங்கிருந்து சென்றுவிட்டது.
காயமுற்றிருந்த குரங்கிற்கு இளைஞர்கள் துரிதமாகச் செயல்பட்டு சிகிச்சை அளித்த உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம மனிதர்களுக்கு உதவி செய்வதற்கா தயங்கிவரும் இந்த காலத்தில் குரங்கின் உயிரைக் காப்பாற்றிய இளைஞருக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!