Tamilnadu
திடீரென பற்றி எரிந்த தீ.. ஓடும் காரிலிருந்து வெளியேறிய ஐவர்.. குரோம்பேட்டை GST சாலையில் நடந்தது என்ன?
சென்னை குரோம்பேட்டையில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் பயணித்த 5 பேரும் உடனடியாக வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த பூபதி (35). இவர் தனது உறவினர்களுடன் செஞ்சியில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்கு செல்ல தாம்பரம் வழியாகக சென்ற போது குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் காரில் இயந்திர கோளாறு ஏற்பட்டு புகை கிளம்பியிருக்கிறது.
இதனை கண்டதும் காரில் பயணித்த 5 பேரும் காரிலிருந்து உடனடியாக வெளியேறினார்கள். சிறிது நேரத்தில் காரில் தீப்பிக்க தொடங்கியது. பின்னர் தீ மளமளவென பரவி கார் முழுவதும் எரிந்தது. இதனையடுத்து தாம்பரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் லீடிங் பையர் மேன் கண்ணதாசன் தலைமையில் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.
இதனால் அப்பகுதியில் சென்றுக்கொண்டிருந்த மக்களிடையே பெரும் பரபரப்பும் அச்சமும் தொற்றியது.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!