Tamilnadu
திடீரென பற்றி எரிந்த தீ.. ஓடும் காரிலிருந்து வெளியேறிய ஐவர்.. குரோம்பேட்டை GST சாலையில் நடந்தது என்ன?
சென்னை குரோம்பேட்டையில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் பயணித்த 5 பேரும் உடனடியாக வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த பூபதி (35). இவர் தனது உறவினர்களுடன் செஞ்சியில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்கு செல்ல தாம்பரம் வழியாகக சென்ற போது குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் காரில் இயந்திர கோளாறு ஏற்பட்டு புகை கிளம்பியிருக்கிறது.
இதனை கண்டதும் காரில் பயணித்த 5 பேரும் காரிலிருந்து உடனடியாக வெளியேறினார்கள். சிறிது நேரத்தில் காரில் தீப்பிக்க தொடங்கியது. பின்னர் தீ மளமளவென பரவி கார் முழுவதும் எரிந்தது. இதனையடுத்து தாம்பரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் லீடிங் பையர் மேன் கண்ணதாசன் தலைமையில் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.
இதனால் அப்பகுதியில் சென்றுக்கொண்டிருந்த மக்களிடையே பெரும் பரபரப்பும் அச்சமும் தொற்றியது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!