Tamilnadu
திடீரென பற்றி எரிந்த தீ.. ஓடும் காரிலிருந்து வெளியேறிய ஐவர்.. குரோம்பேட்டை GST சாலையில் நடந்தது என்ன?
சென்னை குரோம்பேட்டையில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் பயணித்த 5 பேரும் உடனடியாக வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த பூபதி (35). இவர் தனது உறவினர்களுடன் செஞ்சியில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்கு செல்ல தாம்பரம் வழியாகக சென்ற போது குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் காரில் இயந்திர கோளாறு ஏற்பட்டு புகை கிளம்பியிருக்கிறது.
இதனை கண்டதும் காரில் பயணித்த 5 பேரும் காரிலிருந்து உடனடியாக வெளியேறினார்கள். சிறிது நேரத்தில் காரில் தீப்பிக்க தொடங்கியது. பின்னர் தீ மளமளவென பரவி கார் முழுவதும் எரிந்தது. இதனையடுத்து தாம்பரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் லீடிங் பையர் மேன் கண்ணதாசன் தலைமையில் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.
இதனால் அப்பகுதியில் சென்றுக்கொண்டிருந்த மக்களிடையே பெரும் பரபரப்பும் அச்சமும் தொற்றியது.
Also Read
-
“முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்!” : முரசொலி தலையங்கம்!
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!